Monday, June 22, 2015

ஜோதிடவியல்:10ல் ராகு இருந்தால்....

ஜோதிடவியல்:10ல் ராகு இருந்தால்....


ஜோதிடவியல், இந்தியாவின் பல பல்கலை கழகங்களில் பாடத்திட்டமாக வைக்கப்பட்டுள்ளது. 

உதாரணமாக, தமிழ் நாட்டில் மதுரை காமராஜர் பல்கலை கழகம், அன்னை தெரசா பல்கலை கழகம் மற்றும் கேரளா பல்கலை கழகம் என்று பல பல்கலை கழகங்களில் பாடமாக உள்ளது.


ஜோதிடவியலும் வானவியலும் ஒன்றை ஒன்று பின்னி பிணைந்து இருப்பதாகவே தோன்றுகிறது.ஆரியபட்டரைப் பற்றி தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

இப்போது விஷயத்திற்கு வருவோம். 

கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அதில் நீங்கள் பிறந்த தேதி, நேரம் மற்றும் பிறந்த மாநிலம், இடம்( புகைப்படம் பார்க்கவும்) ஆகியவற்றை தேர்வு செய்தால், உங்கள் ஜாதகம் தமிழில் கிடைக்கும்.நீங்கள் பிறந்த இடம்  அதில் இல்லை என்றால், பிறந்த இடத்திற்கு அருகில் உள்ள இடத்தை தேர்வு செய்யவும்.

http://astrology.tamilcube.com/tamil-astrology/tamil-horoscope.aspx

உதாரணமாக இங்கு ஒரு ஜாதகம் கொடுத்துள்ளேன். ( புகைப்படம் பார்க்கவும்). இந்த ஜாதகத்தில் லக்னம் என்று எழுதிருக்கும் கட்டம் தான் முதல் வீடு,  இந்த புகைப்படத்தில் மிதுனம் ஒன்றாவது வீடு, கடகம் இரண்டாவது வீடு.....பத்தாவது வீடு மீனம். இதில் சந்திரன் உள்ளது. (படத்தை பெரிதாக பார்க்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்)

இந்த 10-வது வீட்டில் ராகு இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம்.

 ஜாதகன் செய்யும் தொழிலில் அல்லது வேலையில் புகழ் பெறுவான். இயற்கையாகவே தொழில்நுட்ப அறிவு இருக்கும். 

 சிலர் வீரதீரச் செயல்களைச் செய்பவர்களாக இருப்பார்கள் மொத்தத்தில் வீரம், தைரியம், பாராக்கிரமம் ஆகியவைகளைக் கொண்டவனாக ஜாதகன் இருப்பான். எல்லா செளகரியங்களையும்  பெற்றவனாக இருப்பான் அறிவு, அந்தஸ்து ஆகியவற்றால் மேம்பட்ட வாழ்க்கைச் சூழலில் ஜாதகனின் வாழ்க்கை அமைந்து சிறக்கும்!

பல தொழில் செய்யும் யோகம் இருக்கும். அடிக்கடி தொழிலை மாற்றுவான். ராகு தசை நடக்கும்  போது இவரை மிஞ்ச யாரும் கிடையாது. கமிஷன் தொழில் இவர்களுக்கு கை வந்த கலை.

எனக்கு தெரிந்தது இவ்வளவு தான். சரியா இல்லையா என்று உங்கள் ஜாதகத்தை வைத்து தெருந்து கொள்ளுங்கள்.

பின் குறிப்பு:

எங்கள் Blog: Jfivenews.blogspot.in
 எங்கள்  facebook page  : J5 news
எங்கள் Email: jfivenews@gmail.com

1. மறக்காமல் like & share பண்ணுங்க. அதுதான் என்னை மீண்டும் மீண்டும் எழுதத்  தூண்டும்.
 
2.இப்பதிவில் உள்ளவற்றை முன் அனுமதியின்றி வேறு எங்கேனும் பயன் படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- J5 news Team








No comments:

Post a Comment

This is Jesu from Pathinathapuram