Thursday, May 30, 2019

நேசமணிக்கு என்னாச்சு! -அதிர்ச்சியில் உறைந்த ஜெர்மன் நாட்டுக்காரர் !

                                 
இன்று ஜெர்மனியில் விடுமுறையாததால் காலையில் சற்று தாமதமாகத்தான் எழும்பினேன். யோகா முடித்து குளித்துவிட்டு, டோஸ்ட் செய்ய பிரட் பாக்கெட்டைப்  பிரிக்கும் போது, என் மொபைல் சிணுங்கியது. எடுத்தேன். மறுமுனையில் ஜெர்மன் நண்பர்! இன்று அலுவலகம் இல்லையே! அப்புறம் ஏன் போன் செய்கிறார் என்று யோசித்துக்கொண்டே  'ஆன்' செய்தேன்.

"ஒரு முக்கியமான விஷயம்" என்று ஜெர்மன் மொழியில் பேச ஆரம்பித்தார். "எனக்கு உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. எல்லாமே நன்றாக நடக்கும். கவலைப்படாதீர்கள்" என்றவர், 'சாப்பிடீர்களா?' என கேட்க,

"இனி தான்" என்ற நான், சற்று குழம்பிய நிலையில், "என்ன சொல்ல வருகிறீர்கள், அலுவலகத்தில் ஏதும் பிரச்சினையா? இன்று விடுமுறை தானே? " என்று கேள்விகளை அடுக்கினேன்.

'ஆம், விடுமுறைதான், நான் வீட்டில் தான் இருக்கிறேன்.நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்' என்றார்.

"வீட்டில்"

'கோவிலுக்கு செல்ல வில்லையா'

"சனி, ஞாயிறு மட்டும் செல்வேன்"

'நான் காலையிலேயே போயிட்டு வந்துட்டேன்" என்றவரிடம்

"பிறந்த நாளா ?"  என்று நான் கேட்க,

'இல்லை, நேசமணிக்காக வேண்டிக்கொள்ள!' என்றார்.

எனக்கு ஆரம்பத்தில்  எதுவுமே புரியவில்லை. எனக்கு அவர் விளக்கிக்கொண்டிருக்க, அருகில் இருந்த இன்னொரு மொபைலில் வாட்சப் பார்த்த எனக்கு எல்லாமும் புரிய ஆரம்பித்தது.

Friends படம் பற்றியும் அதில் வரும் காண்ட்ராக்டர் நேசமணி பற்றியும் விளக்கினேன். என் வீட்டுக் கடிகாரத்தில் ஒரு மணி நேரம் கடந்திருந்தது.

சிரித்தவர், அந்த படத்தின் காப்பி கிடைக்குமா என்றார்.

Friends பட தயாரிப்பாளர்கள் ஜெர்மன் மொழியில் படத்தை டப் செய்தால் நல்ல வருமானம் பார்க்கலாம்.







Wednesday, May 29, 2019

என் கார் பறந்த அதிசயம் கட்டுரை தினமணியில் ...

என் கார் பறந்த அதிசயம் கட்டுரை தினமலரில் ...

என் ஏரோபிளான் கேட் தினமலரில் ...

ஜெர்மனியில் கல்விக்கண் திறந்த மூன்சென் தமிழ்ச்சங்கம்

ஜெர்மனியில் கல்விக்கண் திறந்த முன்சென் தமிழ்ச்சங்கம்
_____________________________________________
புலவர்களைப் கவி புனையச் சொல்லி, அவர்களுக்கு பொற்கிழியையும், பொற்காசுகளையும் வழங்கிய மன்னர்களுக்கு மத்தியில் தன் பாடலின் மூலம் பல நல்ல உள்ளங்கள் கல்விச்சாலைகள் ஆரம்பிக்க ஊக்கப்படுத்திய அதிவீரராம பாண்டிய மன்னனின் புகழ், தமிழுலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும். அப்படி என்ன பாடலை அவர் எழுதினார் என கேட்கிறீர்களா? பதில் உள்ளே!
"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்பது போல, கடந்த ஒரு மாத காலமாகவே, எம் தமிழர்களின் சந்தோஷம், ஜெர்மனியின் முன்சென் நகரையும் தொற்றிக்கொண்டது. ஏன் தெரியுமா? இங்கு வாழும் தமிழ் மக்கள், தஞ்சை தமிழ் இணையப் பல்கலைக்கழகத்ததுடன் இணைந்து "முன்சென் தமிழ் அகாடமி"யை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.
இது தமிழ்ப் பள்ளி என்று ஒற்றை வரியில் சொல்லிவிட முடியாது. நிகர்நிலைப் பல்கலைக்கழகம் பாணியில், கலை மற்றும் கலாச்சாரம், பண்பாடு, நாட்டுப்புற கலைகள், இலக்கியம், நூல் நிலையம் என்று ஒரு பல்கலைக்கழகத்தின் அனைத்து துறைகளையும் உள்ளடக்கியுள்ளது இந்த அகாடமி. கல்வி மற்றும் பாடப்பிரிவுகள், மாணவர் சேர்க்கை, கட்டண விகிதம் என அனைத்தையுமே நிகர்நிலைப் பல்கலைக்கழகம் மாதிரி இவர்களே நிர்ணயித்துக்கொள்ளலாம்.
ஒரு வருடத்திற்கும் மேலாக பலரின் கடின உழைப்புக்குக் கிடைத்த பலன் தான் இந்த தமிழ் அகாடமி. 2018-ம் ஆண்டு முன்சென் தமிழ்ச்சங்கம் ஆரம்பித்தபோதே இந்த தமிழ் அகாடமிகான விதை ஊன்றப்பட்டது. அதைப்பற்றி தெரிந்துகொள்ள திரு.செல்வகுமார் பெரியசாமி அவர்களை அலைபேசி வழியாகத் தொடர்பு கொண்டோம்.
பேசும் போதே அவர் குரலில் அத்தனை உற்சாகம்! அவர் பேசும் போது " அமெரிக்கா, UK மற்றும் சிங்கப்பூரில் உள்ள தமிழ் சங்கங்களிடம், பள்ளிக்கூடம் அமைப்பது தொடர்பாக பேசி சில விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்.அதன் பின்னர் , தஞ்சை தமிழ் இணைய பல்கலைக்கழகத்தைத் தொடர்பு கொண்டு , பாடத்திட்டங்கள் சமபந்தமாக சில விளக்கங்கள் கேட்டு தெளிவு பெற்ற பின்னர், புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் எங்களுக்கு அனுமதி கிடைத்திருக்கிறது. தமிழில் டிப்ளமோ மற்றும் இளங்கலை பாடத்திட்டங்கள் வரை எங்கள் எதிகாலப் பட்டியலின் நீளம் ரொம்ப அதிகம்" என்றார். மேலும் தொடர்ந்து அவர் பேசும் போது "திரு.திலக் ஸ்ரீராம் அவர்கள், முன்சென் நகர அலுவலகங்களில் அனுமதி வாங்குவது, குழந்தைகளுக்கான பாதுகாப்பு முறைகள் போன்ற வேலைகளைப் பார்த்துக்கொள்ள, திரு.நிர்மல் ராமன் அவர்கள் பள்ளியின் கட்டமைப்பு, செயல்முறை, மற்றும் மக்கள் தொடர்பு சம்பந்தமான வேலைகளைப் கவனித்துக் கொண்டார்" என்றார்.
அவரைத்தொடந்து இந்த அகாடமிக்கு விதை ஊன்றிய திரு. அருண் சின்னமணி பேசும் போது " முன்சென் நகர நிர்வாகம், தங்களுக்கு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை "Grundschule an der Swanthalerstr" பள்ளியை பயன்படுத்திக்கொள்ள அனுமதி தந்திருக்கிறார்கள்" என்றார். தன்னார்வத் தொண்டர்களை ஒன்றிணைத்து அகாடமி சம்பந்தமாக அனைத்து வேலைகளையும் உடனுக்குடன் முடித்து சித்திரை திருநாளில் திறப்புவிழா ஏற்பாடுவரை இவரின் பங்கு மகத்தானது.
இங்கு அமைந்துள்ள இந்தியத் தூதரகமும் இவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி, பக்க பலமாய் துணை நிற்கிறது. மேலும் தமிழ் இசை மன்றத்திற்குத் தேவையான இசைக் கருவிகளை வாங்கிக்கொடுக்கவும் எண்ணமும் அவர்களுக்கு இருக்கிறது.
ஜெர்மனியைப் பொறுத்தவரையில், கல்வியாண்டு செப்டெம்பரில் ஆரம்பிப்பதால், இவர்களும் தமிழ் அகாடமி வகுப்புகளை அதே மாதத்தில் ஆரம்பிக்கவுள்ளார்கள். ஆனால், தற்போது ஆயத்தவகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஏறத்தாழ 40 பிள்ளைகள் இது வரையிலும் பதிவு செய்திருக்கிறார்கள்.5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பாடல்கள் சொல்லிக்கொடுப்பது என்றும், 6 முதல் 11 வரை உள்ள பிள்ளைகளுக்கு எழுதுவது, படிப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவது என்றும் அகாடமி குழுவினர் முடிவு செய்துள்ளனர்.தகுதித் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 நபர்கள் உள்ள இந்த குழு பயிற்றுவித்தலில் கவனம்செலுத்த, மற்றோர் குழு பாடத்திட்டங்கள் வரையறுத்தல், தேர்வுத் தாள் தயாரித்தல் போன்ற பணிகளை ஈடுபட்டுள்ளது.
மூன்றாவதாக, இன்னொரு 10 நபர்கள் கொண்ட நிர்வாகக் குழுவானது, மாணவர் சேர்க்கை, வருகைப் பதிவேடு, பள்ளியில் மாணவ மாணவிகளின் பாதுகாப்பு, சமூக ஊடகங்களில் அகாடமி பற்றிய செய்திகளை அப்டேட் செய்வது போன்ற வேலைகளை கவனித்துக்கொள்ளும்.
மிருதங்கம், நாதஸ்வரம் போன்ற நம் தமிழ் கலாச்சாரம் சம்பந்தமான இசைக்கருவிகள் பயிற்றுவித்தல், சிலம்பாட்டம் கற்பித்தல் போன்ற நம் மரபு சார்ந்த கலைகளும் இனி வரும் காலங்களில் கற்றுக்கொடுக்கப்படும் என்பது சந்தோஷமான கூடுதல் செய்தி!
கடந்த வார ஆயத்த வகுப்புக்கு தன் 7 வயது மகள் லியோவுடன் வந்திருந்த திருமதி. கவிதா ஜியோ நம்மிடம் " முன்சென் நகரைப் பொறுத்தவரை, தமிழ் பள்ளி என்பது ஒரு கனவு தானோ! என்று எண்ணிக்கொண்டிருந்த வேளையில் இப்படி ஒரு அகாடமி ஆரம்பித்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இனி என் மகளும் 'பொன்னியின் செல்வன்' படிப்பாள்" சொல்லும் போதே அத்தனை பெருமிதம் அவரது குரலில்!.
கலை,கலாச்சாரம், மொழி மற்றும் பாரம்பரியம் என்னும் உயரிய குறிக்கோளுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள முன்சென் தமிழ் சங்கத்துடன் ரயில் தண்டவாளம் போல இந்த தமிழ் அகாடமியும் நடை பயில ஆரம்பித்திருக்கிறது.ஆம்! சித்திரை 1 ம் தேதி மிகப் பிரமாண்டமாக திறப்புவிழா நடத்தினார்கள். எந்த ஒரு நிகழ்ச்சி என்றாலும் கடவுளை நினைத்து குத்துவிளக்கு ஏற்றி ஆரம்பிப்போம். ஆனால் இங்கோ, அந்த இறைவனே வந்து விளக்கேற்றினார். என்ன! ஆச்சரியமாக இருக்கிறதா? "குழந்தையும் தெய்வமும் ஒன்று" என்று நம் முன்னோர்கள் காரணமாய்தான் சொல்லியிருக்கிறார்கள்.
இப்படி பலரின் முயற்சியாலும், கடின உழைப்பாலும், ஜெர்மனியின் முன்சென் நகரில் இன்று தமிழ் அகாடமி உயர்ந்து நிற்கிறது.விவேகானந்தர் தேடிய 100 இளைஞர்களில் இந்த நல்ல உள்ளங்களுக்கு நிச்சய இடம் உண்டு.
ஆம்! அதிவீரராம பாண்டியரின் வெற்றிவேற்கையின் "எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும்" என்பது முன்சென் தமிழ்ச்சங்கத்துக்கு சாலப்பொருந்தும்.
அவர்களின் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்!
Photo: முன்சென் தமிழ்ச்சங்கம்
Like my FB Page: "J5 News"
Visit my blog: www.jfivenews.blogspot.com

Monday, May 27, 2019

என் கட்டுரை இன்று விகடனில் 27.05.2019

நேற்றைறய, என் ஏரோபிளேன் கட்டுரை இன்று விகடனில்:https://www.vikatan.com/news/world/158434-gibraltar.html

என்ன மீசையை முறுக்குகிறாயா?

updated version of "விசித்திர மீசைகள்"

கடந்த வாரம், பெல்ஜியத்தின் ANTWERP ல் உள்ள குயின் எலிசபெத் ஹால் மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழிந்தது. மேடையில் இருந்த அனைவருமே விதவிதமான தாடி மீசையில்!. பார்வையாளர்களோ சந்தோஷத்தின் விளிம்பில்!!அப்படி என்ன நிகழ்ச்சி என்கிறீர்களா? யாருடைய தாடி, மீசை அழகாக இருக்கிறது என்பதற்கான போட்டி தான் இது. இரண்டு வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் இந்த விழாவுக்கு
அமெரிக்கா மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல மீசை ஜாம்பவான்கள் வந்திருந்தனர்.
ஜெர்மனியின் Black forest என்ற ஊரில் 1990 ம் ஆண்டு, Höfener Beard Club தொடங்கப்பட்டு அதன் மூலம் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை போட்டி நடத்த முடிவெடுக்கப்பட்டது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில், மூன்றாவது நாள் முழுக்க முழுக்க பெண்களுக்காக. குழப்பமாக இருக்கிறதா? செயற்கை தாடி மீசையில் யார் அழகு என்ற போட்டி தான்!




மீசையைப் பொருத்தவரையில் பல பழமொழிகளும், முதுமொழிகளும் நம் வழக்கத்தில் உள்ளன.
" குப்புற விழுந்தாலும் மீசைல மண்ணு ஒட்டலை"
"கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை"
"மீசை நரைத்தாலும் ஆசை நரைக்கவில்லை"
"அத்தைக்கு மீசை முளைத்தால்...."
வீர பாண்டிய கட்டபொம்மன் படத்தில் கூட,
" என்ன மீசையை முறுக்குகிறாயா! அது ஆபத்தின் அறிகுறி"
தமிழ் நாட்டைப் பொருத்தவரை, மீசை வேண்டாம் என்று நினைக்கிற இளைஞனை பார்ப்பது அபூர்வம். அந்த அளவிற்கு மீசை மேல் ஒரு ஈர்ப்பு அனைத்து இளைஞர்களுக்குமே உண்டு. மீசையின் இரண்டு ஓரத்தையும் சிறிது முறுக்கி விட்டு தானும் போலிஸ் என்ற நினைப்பில் உலாவரும் டீன் ஏஜ் பருவத்தினரின் கனவுகள் பல.
மீசையைப் பொருத்தவரையில் விதிவிலக்காக ஒரு சிலர் உண்டு. முறுக்கிய மீசையுடன் வெள்ளை வெட்டி சட்டையில் தங்களை எதற்கும் பயப்படாத தைரியசாலியாக காட்டிக்கொள்வதை பெருமையாக எண்ணுவார்கள். நம் வீட்டு தாத்தா, பூட்டன் போன்ற பெரியவர்களின் புகைப்படங்களை பார்த்தால் இரண்டு பக்கமும் மீசையை அழகாக சீவி மேல் நோக்கி வளைத்து விட்டிருப்பார்கள். அந்த மீசையின் அடர்த்தியே அவைகளின் நாட்டாமையை பறைசாற்றும்.
முறுக்கிய மீசை வானத்தைப் பார்த்தவண்ணம் இருந்தால் வீரத்தின் அடையாளம் என என்னும் நமக்கு நேரெதிர் சீனர்கள். அவர்களின் மீசை பூமியை பார்த்து தொங்கிய வண்ணம் இருக்கும். வட நாட்டினரையோ வெளிநாட்டினரையோ எடுத்துக்கொண்டால் மீசை வைத்திருப்பவர்களை எண்ணி விடலாம்.உலகை அழவைத்த
ஹிட்லருக்கும் அரை மீசை!
உலகை சிரிக்க வைத்த சார்லி சாப்ளினுக்கும் அரை மீசை!!
என்ன ஒரு முரண்பாடு!!
ஒருவரை சவாலுக்குத் தயாரா என்றால் கூட உடனே "தோத்துட்டா ஒரு பக்க மீசையை எடுத்திருவியா" என்று தான் முதலில் கேட்ப்பார்கள்.திருச்சி மாவட்டத்தில் மங்கலம் என்னும் ஊரில் மீசையுடன் இருந்த ஒரு புத்தர் சிலையைக் சில வருடங்களுக்கு முன் கண்டுபிடித்தனர்.
விவேகனந்தரின் மாணவியான நிவேதிதையை தமது குருவாக கொண்டவரான நம் தமிழ் கவி பாரதியின் மீசையை மறக்கமுடியுமா? ஐயர் வீட்டிலும் மீசை உண்டு என்பதை பாரதியிடம் மட்டுமே காணமுடியும். புரட்சிக் கவி என்றால் சும்மாவா?
எட்டையபுரம் அரண்மனையிலேயே வேலை கிடைத்தும் சில காலம் மட்டுமே அதில் இருந்து பின் தன விருப்பப்படி கவி புனைவதிலேயே முழு மூச்சாய் இருந்தார்.யானைக்கு வெள்ளை நிறம் தான் பிடிக்காது. ஆனால் தமிழுக்கு வந்த சோதனை! இவரின் கருப்பு மீசையும் பிடிக்காமல் போனது தான் சோகத்தின் உச்சம்.
டோசி மெட்ரிக் முறையில் தெற்கு குவீன்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சியின்படி, மீசை, தாடிகளை வளர்ப்பவர்களுக்கு புற்றுநோய்க்கு காரணமன கதிரியிக்கத்தின் பாதிப்பு மிகக் குறைவாகவே உள்ளது.முகச் சருமத்தில் ஏற்படும் சூரியக்கதிர்களின் பாதிப்பு குறித்து கண்காணிக்கப்பட்டதில், பெரிய மீசை வளத்திருப்பவர்களின் சரும பாதிப்பு, மீசையை மழித்துவிட்டிருக்கும் நபர்களின் பாதிப்பில் மூன்றில் ஒரு பங்குதான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதெல்லாம் சரி! 'மீசைப் போட்டியில் யார் ஜெயிச்சதுனு இன்னும் சொல்லலியே' னு கேக்குறீங்களா? இதோ அதற்கான விடை:
அழகான மீசை, அரை தாடி, முழு தாடி என்று பல பிரிவுகளில் போட்டிகள் நடை பெற்றன. அதில், ஜெர்மனியைச் சார்ந்த திரு.வுல்ப்கேங் ஸ்நைடர், அழகான மீசைக்கான முதல் பரிசினைப் பெற்றார். அரசத் தோரணைக்கான மீசைகுறிய பரிசு மீண்டும் ஒரு ஜெர்மனியருகே. பெயர்: திரு. யூஜென் ஹிப்.
உண்மையான மீசை போன்ற மேக்கப் போட்டிருந்த மியூகே மீட்டே என்ற ஜெர்மானியப் பெண்மணி, பெண்களுக்கானப் போட்டியில் முதல் பரிசை தட்டிச் சென்றார்.
இந்த போட்டியை நேரிலே பார்க்கணும்னு ஆசையா? அடுத்த போட்டி 2021 ம் ஆண்டு, 500 போட்டியாளர்களுடன் நியூசிலாந்து நாட்டில் நடைபெற உள்ளது. என்ன! டிக்கெட் போட்டுட்டீங்களா?
Photo Courtesy : worldbeardchampionships .com

Sunday, May 26, 2019

ஜெர்மனியில் கார் பறந்த அதிசயம்! பரபரப்புத் தகவல்கள்!

காராவது, பறக்கிறதாவது! யார்கிட்ட கதை விடுறீங்கன்னு சொல்ற ஆளா நீங்க? அப்படினா, ஜெர்மனியின் மூனிச் (Munich) நகருக்கு வந்தால் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்வீர்கள்! ஆம்! கடந்த ஒரு வாரமாகவே ஜெர்மனி முழுக்க இதே பேச்சு தான்! செய்தித்தாள், தொலைக்காட்சிப்பெட்டி என்று எதைத் தொட்டாலும் இந்த செய்தி தான்! சோதனை முயற்சி வெற்றி பெற்ற நிலையில், அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது இதை உருவாக்கிய டீம்!
முடடை வடிவ மையப்பகுதி, இரண்டு பக்கங்களிலும் இறக்கை போன்ற அமைப்பு - ஆனால் ஹெலிகாப்ட்டர் போன்ற வால் இல்லை! பாட்டரியில் இயங்கும் இந்த கார் ஜெர்மனியின் மூனிச் நகரில் உள்ள Lilium கம்பனியின் தயாரிப்பு! நின்ற இடத்திலிருந்தே பறக்கும் வசதி கொண்ட இந்த கார், 2025 ல் மக்களின் பயன்பாட்டுக்கு வருகிறது.இதன் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 300 Km ஆக இருக்கும்.
பறக்கும் கார் பற்றி ஒரு நேர்காணல் வேண்டும் என்று அதன் தலைமை அதிகாரி, திரு. ரெமோ கெர்பர் அவர்களைத் தொடர்பு கொணடோம். உடனடியாக, புகைப்படங்கள், வீடியோ மற்றும் b-roll ஆகியவற்றை உபயோகப் படுத்திக் கொள்ள, கம்பனியின் தகவல் தொடர்பு அதிகாரி திரு ஆலிவர் லிங்க் அனுப்பியிருந்தார்.
ரெமோ கெர்பர், இந்த காரைப் பற்றி குறிப்பிடும்போது, " ஜெட் விமானத்தின் 'fixed wing' வடிவமைப்பில் இது உருவாகி உள்ளதால் இன்ஜினின் இயக்குத்திறன் சிறப்பாக செயல்பட மிகவும் ஏதுவாக இருக்கும்" என்றார்.மேலும் அவர் கூறும் போது, " இதில் 5 நபர்கள் மற்றும் அவர்களின் உடைமைகள், ஒரு பைலட் என பயணம் செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய விமானப் போக்குவரத்துத் துறையிடமும் அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகத்திடமும் சான்றிதழ் பெற ஏற்படுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன" என்றார்.
"இந்த இன்டர்நெட் உலகத்தில் மக்கள் எளிதில் இந்த காரை உபயோகிக்க என்ன மாதிரியான ஏற்பாடுகள் செய்திருக்கிறீர்கள்?"
"ஸ்மார்ட் போன் ஆப் மூலமாக எங்கள் பறக்கும் காரை புக் செய்யலாம். உதாரணமாக, அமெரிக்காவை எடுத்துக்கொண்டால், Uber கார் மூலமாக 20 மைல் தூரம் செல்ல 48 நிமிடங்கள் ஆகிறது. அதற்காக, பயணம் செய்யும் நபர் 30 டாலர் கொடுக்க வேண்டியிருக்கும்.ஒரு நாளைக்கு இது மாதிரி Uber, 10 சவாரி வரை எடுக்கமுடியும். அப்படிப் பார்த்தால், ஒரு நாளைக்கு 300 டாலர், அதாவது வருடத்திற்கு 75,000 சம்பாதிக்க முடியும்.எங்கள் பறக்கும் காரில் (Lilium Jet) 12 நிமிடத்தில் 20 மைல் தூரத்தை அடைய முடியும். அதற்காக நாங்கள் வாங்கப் போகும் தொகை 50 டாலர் மட்டுமே! ஒரு நாளைக்கு 40 ட்ரிப் வரை செல்ல முடியும். கணக்குப் பார்த்தால், ஒரு நாளைக்கு 2000 டாலர், வருடத்திற்கு 1.5 மில்லியன் டாலர் வரை வருமானம் கிடைக்கும்.
"முதலீடு என்பது எவ்வளவு முக்கியமோ அது மாதிரி பணம் போடுபவர்களின் நம்பிக்கையைப் பெறுவது அதைவிட முக்கியம். உங்கள் முதலீட்டாளர்கள் பற்றி....?
மொத்தமாக, 101.4 மில்லியன் டாலர்கள் இந்த ப்ராஜெக்ட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் பிரபல முதலீட்டாளர் திரு. பிராங்க் தீலன் அவர்களிடம் பலர், நெகடிவ் ஆக முடிந்த, இது போன்ற ப்ராஜெக்ட்டுகளை சொல்லி பயமுறுத்தியுள்ளனர். ஆனாலும் அவர் எங்கள் மீது மிகுந்த நம்பிக்கைக் கொண்டுள்ளார். மற்றும் Skype நிறுவனத் தலைவர் திரு. நிக்லாஸ் சென்ஸ்ட்ராம் அவர்களின் வெஞ்சர் கேப்பிடல் நிறுவனம், Tencent என்ற சீனாவின் பிரபல இன்டர்நெட் நிறுவனம் என்று எங்கள் முதலீடாளர்கள் எங்கள் மீது நம்பிக்கையுடனே உள்ளனர்.
"கடைசியாக ஒரு கேள்வி! Joby Aviation, Kitty Hawk போன்ற பிரபல கம்பனிகளும் பறக்கும் கார் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதே! போட்டியை எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்?"
Blade ன் "Uber for helicopters", அமெரிக்காவில் உள்ள மன்ஹாட்டனிலிருந்து JFK ஏர்போர்ட் செல்ல 195 டாலர் வாங்கும் பட்சத்தில் நாங்கள் 70 டாலரை நிர்ணயிக்க இருக்கிறோம்.
கார் பறக்கும் வீடியோ-வைக் காண, இங்கே
https://www.youtube.com/watch?time_continue=3&v=8qotuu8JjQM'கிளிக்'கவும்.



விகடனில் என் படைப்பு 24.05.2019

நான், முகநூலில்  "J5 News" பக்கத்தில் எழுதிய பறக்கும் கார் கட்டுரை, விகடனில் வெளியாகியுள்ளது. அதன் லிங்க் இதோ:  .

https://www.vikatan.com/news/world/158266-germany-plans-for-flying-taxi-service.html?fbclid=IwAR0zpUSM_dtFu09PAcI2NKbgxkWmnQupSrM15o3xZfjFMxdje-PoY9cKdA4

Saturday, May 25, 2019

பத்திரிக்கைகளில் வெளிவந்த என் கட்டுரைகள்


20.May.2019 விகடன் -தப்பாட்டம்...மயிலாட்டம்...ஒயிலாட்டம்... ஜெர்மன் நகரைத் தெறிக்கவிட்டஇந்திரதனுஷ் விழா! 

14.May.2019தினமணி - 
https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/may/14/new-current-affair-in-germany-3151577.html?fbclid=IwAR2XOj8zDD4w4Lcrhb9vp7YYKpOihgDHGCaFwbpfP8DmXjsUeHfzH6-YPho

தினமலர் 
https://www.dinamalar.com/nri/details.asp?id=12597&lang=ta
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
09.May.2019 தினமணி - 

சுவிஸ் வங்கியில் நம்மால் ஒரு அக்கவுண்ட் தொடங்க முடியுமா? முடியும் இதோ வழி!


http://bit.ly/2VAzdiL
--------------------------------------------------------------------------------------------------------------------------
09.May.2019 தினமணி மற்றும் தினமலர் -

ஜெர்மனியில் செர்ரி மலர்களின் கோலாகலம்!


http://bit.ly/2Zu3UVS

https://www.dinamalar.com/nri/details.asp?id=12550&lang=ta

---------------------------------------------------------------------------------------------------------------------

26.Apri.2019தினமணி நாளிதழில்- 

ஜெர்மனியில் டாய்ஷ்ச பேங்க் மற்றும் காமெர்ஸ் பேங்க் இணைப்பு கைவிடப்பட்டது ஏன்? பரபரப்புத் தகவல்கள்!

https://www.dinamani.com/world/2019/apr/26/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3140575.html?fbclid=IwAR2Y3k3ZOGbhwe9Xyt9Po-pWsozDCcdzvG4BPGxCNoPwx-b8uEaHIVtDXO0


-------------------------------------------------------------------------------------------------------------------
01.April.2019 தினமணி நாளிதழில் - படுக்கையில் ஓய்வெடுக்க 13 இலட்ச ரூபாய். நீங்க ரெடியா?

https://www.dinamani.com/world/2019/apr/01/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-13-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-3125099.html?fbclid=IwAR2pr7F3doH15avf1hei1INDFIkfgxVORsUKveqnOaP2uqxccDVvb7ZqekQ

--------------------------------------------------------------------------------------------------------------------------------------
28.Mar.2019 தினமணி நாளிதழில் - 

இப்போது ஜெர்மனியில் பரபரப்பாக பேசப்படும் விஷயம் எது தெரியுமா?

https://www.dinamani.com/world/2019/mar/28/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-3122620.html

Sunday, May 19, 2019

ஜெர்மனியில் இந்திரதனுஷ் விழா 2019


"ஒரு குருவி இரை எடுக்க, ஒன்பது குருவி வாய் திறக்க" என்ற பழமொழி வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கு மிகவும் பொருந்தும். ஊரிலிருக்கும் அப்பா, அம்மா, உடன் பிறப்புகள் என்று எத்தனை பேர் பசியை ஆற்றுகிறார்கள்! அவர்களுக்கென்று ஒரு விழா!! அதுவும் நம் இந்திய தூதரகம் முன்னின்று நடத்தியது என்றால் அதன் சிறப்பை என்னவென்று சொல்ல!

பிராங்பர்ட் நகரில் உள்ள இந்திய தூதரகமும், ஜெர்மனியின் Eschborn நகரமும் இணைந்து கடந்த சனிக்கிழமை (11.05.2019) இந்திரதனுஷ் விழாவை ஜெர்மன் வாழ் இந்தியர்களுக்காக ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்திய நடனம் மற்றும் இசை, இரண்டையும் அடி நாதமாக வைத்து "Wir Lieben das Leben" என்ற ஸ்லோகத்தை ("நாங்கள் வாழ்வை நேசிக்கிறோம்") பிரதானமாகக் கொண்டு இந்திரதனுஷ் விழா கொண்டாடப் பட்டது.

'Friends of India' குழுவைச் சேர்ந்த திரு.கமல் வரவேற்புரை வழங்க, பிராங்பர்ட் நகரில் உள்ள இந்திய தூதரக அதிகாரி திருமதி.பிரதிபா பார்க்கர் முன்னுரை வழங்கினார்கள். இவர் பேசும் போது"இந்தியாவில் 23 மொழிகள் பேசுகின்ற பலதரப்பட்ட மக்கள், இனம், மதம் என்று வேறுபட்டாலும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற உயரிய மனப்பான்மையுடன் அனைவரும் ஒன்று பட்டு வாழ்கிறோம்" என்று குறிப்பிட்டார். மேலும், Eschborn நகர நிர்வாகிகளுக்கு, இந்த மாதிரி ஒரு நிகழ்வை நடத்த தங்களுடன் இணைந்து கொண்டதற்கு நன்றி தெரிவித்ததோடு, "கதக், ஒடிசி, குச்சிப்பிடி, தமிழ்நாட்டின் பரதநாட்டியம் என்று இந்தியாவின் பிரபல நடனங்களை, அவை தோன்றிய மாநிலத்தின் பெயரையும் சேர்த்து பட்டியலிட்டதோடு அவை அனைத்தும் உங்கள் கண்களுக்கு விருந்தாக இங்கு அரங்கேறவிருக்கின்றன" என்றார்.
அவரைத் தொடர்ந்து, Eschborn நகர சபை முதன்மை உறுப்பினர், திரு.தாமஸ் எபெர்ட் அவர்கள் பேசும் போது" இங்கு 120 நாடுகளிலிருந்து வெளிநாட்டவர்கள் வந்து வேலைசெய்கின்றனர். அவர்களுக்கு எப்போதும் பக்க பலமாய் இருப்போம்" என்றார்.Eschborn நகர மேயர் திரு. மத்தியாஸ் கீகெர் அவர்கள், விடுமுறை நிமித்தம் வெளியூர் சென்றிருந்ததால் அவர் பேசிய வீடியோவை ஸ்கிரீனில் ஒளிபரப்பினார்கள். அவர் பேசும் போது,
" இந்தியர்களை நாங்கள் மிகவும் முக்கியமானவர்களாக பார்க்கிறோம், என் ஆதரவு எப்போதும் அவர்களுக்கு உண்டு" என்றார்.
அதைத் தொடந்து, இந்திய தூதரக அதிகாரி திருமதி.பிரதிபா பார்க்கர் மற்றும் Eschborn நகர சபை முதன்மை உறுப்பினர், திரு.தாமஸ் எபெர்ட் இருவரும் குத்துவிளக்கு ஏற்றி வைக்க, விழா ஆரம்பமானது.
ஜெர்மன் பெண்மணி ஒருவர், இந்தியாவுக்கு வந்து இந்திய கலாச்சாரத்தைப் பற்றி தெரிந்து கொள்வது போலவும், அவருக்கு இந்திய பெண்மணி ஒருவர் ஒவ்வொரு கலைநிகழ்ச்சிகளும் விளக்குவது போலவும் நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டிருந்தன.
முதலில் சிறுவர் சிறுமியரின் யோகாசனம் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்ந்த, அடுத்தடுத்து ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் நடனங்கள் அரங்கேற, வந்திருந்த அனைவருமே உற்சாக வெள்ளத்தில்!
நல்ல சகுனமாம் மங்களவழக்கில் ஒலிக்கும் சங்கு ஓசையுடன் ஆலய மணியோசையும் ஒலிக்க, தலையில் முளைப்பாரி ஏந்தி நம் தமிழ் பெண்கள் மேடை ஏறிவர எனக்கும் உற்சாகம் தொற்றிக்கொண்டது. அதுவரை, புரியாத பாஷையில் பாடல்களை கேட்ட காதுகளுக்கு எம் தமிழ் மொழி தேனாய் தித்தித்தது. ஏழு பெண்களும்
"கொட்டுங்க கொட்டுங்க கும்மிய கொட்டுங்க" என்று பாடி, நாடும் மனிதமும் வளரவேண்டும் என்றதோடு பெண் முன்னேற்றமும் வேண்டும் என்று புதுமை பெண்களாய் கும்மி பாட்டுக்கு நடனமாடி தொடங்கி வைத்தனர். அடுத்து இரண்டு பொய்க்கால் குதிரைகள் மேடையின் கீளேழ அட்டகாசமாய் ஆட்டம் போட, மேடையில் ஒயிலாட்டம் தூள் பறக்க, உற்சாகத்தில் பார்வையாளர்கள் இருக்கையின் நுனிக்கு வந்து விட்டனர்.
ஜல்லிகட்டை ஞாபகப் படுத்தும் விதமாக பாடலை நடனத்தில் இணைத்தது மிகச் சிறந்த புத்திசாலித்தனம்! பாராட்டுக்கள்!! மெரினா ஞாபகம் வந்து போனது. புலி வேஷம் கட்டி ஆடுபவர்களைப் பற்றி கேள்வி பட்டிருக்கிறேன். இங்கு தான் நேரில் பார்த்தேன். இரண்டு பேரும் தெறிக்க விட்டுட்டாங்க! தப்பாட்டம் ஆடியவர்களின் நடனத்தில் அப்படி ஒரு நேர்த்தி! இவங்களுக்கு திருஷ்டி சுத்தி போடணும்! லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட் என்று சொல்வார்களே! அது மாதிரி மயிலாட்டம் ஆரம்பமானதும் அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்தது. அந்த இசை! அய்யோ !! கேட்டுக்கொண்டே இருக்கலாம்!. ஏன் இவ்வளவு சீக்கிரம் முடித்து விட்டார்கள் என்று மனம் ஏங்கியது.
கொடுக்கப்படட 10 நிமிடத்தில் தமிழகக் கலைகளை அற்புதமாக மேடையில் அரங்கேற்றிய அனைவரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். பயிற்றுவித்த டான்ஸ் மாஸ்டர் திரு. நாககுமார், பிராங்பர்ட் நகரில் அமைந்த "StepZ Frankfurt " என்ற நடன பள்ளியின் உரிமையாளர் ஆவார். அவருக்கும் வாழ்த்துக்கள்!
மேலும், மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு " மகாத்மா காந்தியின் வாழ்க்கை மற்றும் அவரது சுதந்திரப் போராட்டம்" என்ற தலைப்பில் கண்காட்சியும் இடம் பெற்றிருந்தது. கைவினைப் பொருட்கள், இந்திய உணவு வகைகள் என்று கண்களுக்கும், செவிகளுக்கும் மட்டுமல்லாமல் வயிறுக்கும் விருந்து! மொத்தத்தில் அன்றைய நாள் ஜெர்மன் வாழ் இந்தியர்கள் அனைவருக்குமே கொண்டாட்டம் தான்!
புகைப்படங்கள்: திரு. சந்தோஷ் பட்டா (Knowhow Photography)