Saturday, May 16, 2015

இடி மின்னலும் ஒற்றை பனைமரமும்

இடி மின்னலும் ஒற்றை பனைமரமும் 

இடி மின்னல் வந்தால் ஒற்றை பனை மரத்தடியில் ஒதுங்கக் கூடாது என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஏன் என்று எளிய முறையில் விளக்க முயற்ச்சித்திருக்கிறேன். 






இடி மின்னல் எப்படி வருகிறதென்று அனைவருக்கும் தெரியும் அல்லது இணையத்திலாவது தேடிப்  படித்திருப்பீர்கள். படிக்கவில்லை என்றால் பின்னூட்டம் ( comment ) இடவும். அதைப்பற்றி புது பதிவு ஒன்று போடுகிறேன்.

பனை மரத்தைப் பொருத்தவரை நம் பத்திநாதபுரம் மக்களுக்கு 1889-ம் ஆண்டு தொட்டே உறவு இருந்து வருகிறது. கும்பிடு பனையை நம் வீட்டுப்  பெரியவர்கள்  யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள்.

அப்படா! ஒரு வழியாக தலைப்பில் உள்ள மூன்று வார்த்தைகளுக்கும்  விளக்கம் கொடுத்து விட்டேன். இனி மூன்றிற்கும் உள்ள சம்பந்தத்தை பார்ப்போமா?


ஒளியின் வேகம் ஒலியின் வேகத்தை விட பல மடங்கு அதிகம் என்பதால் நாம் முதலில் மின்னலைத்தான் பார்க்க முடியும். சிறிது நேரம் கழித்தே இடியின் ஓசையை கேட்க முடியும்.


ஒளியின் வேகம்  =  299792458 metres per second (≈3.00×108 m/s). 

எளிதில் புரியும் படியாக சொல்வதென்றால்,

 நாம் பைக் ஓட்டும் வேகம்  மணிக்கு 60கிலோமீட்டர்
ஒளியின்  வேகமோ  மணிக்கு 107924400 கிலோமீட்டர்.


இவ்வளவு வேகத்தில் பயணித்தும், ஒளியானது சூரியனிலிருந்து பூமியை வந்தடைய 8 நிமிடங்களும் 17 வினாடிகளும் ஆகிறது. அதாவது சூரியன் முழுவதும் எரிந்து இருட்டாகிவிட்டால் கூட நமக்கு  8 நிமிடங்கள்  17 வினாடிகள் வெளிச்சம் இருக்கும்.

ஒலியின்  வேகம் மணிக்கு 1236 கிலோமீட்டர் மட்டுமே.

நாம் பறக்கும் விமானத்தின் சராசரி வேகம் மணிக்கு  900 கிலோமீட்டர் முதல்
1100 கிலோமீட்டர்  வரை. 

உங்கள்ளுக்கு ஒன்று தெரியுமா?

ஒலியை விட ஏறத்தாழ இரண்டு மடங்கு  வேகமாக செல்லும் கான்கார்டு
(concorde) விமானங்களை  பிரிட்டிஷ்  மற்றும் பிரான்ஸ் நாடுகள் 
இணைந்து தயாரித்தன.20 விமானங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டன.

 1969 வெள்ளோட்டம் விடப்பட்டாலும் 1976 முதல் 2003 வரை
இந்த ரக விமானங்கள்  மக்களுக்காக பயன்பாட்டில் இருந்தன. சாதாரண ரக
 விமானங்கள் செல்லும் நேரத்தைவிட பாதி நேரத்திலேயே இது குறிப்பிட்ட 
இடத்தை அடைந்து விடும்.பெரும்பாலும் இவைகள் இங்கிலாந்தின் லண்டன் 
மற்றும் பிரான்ஸ் நாட்டின்  பாரிஸ் நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க்
 மற்றும் வாஷிங்டன்  நகரங்களுக்கு பறந்து கொண்டிருந்தன. 92 முதல் 128 இருக்கைகள் வரை 
இந்த ரக விமானத்தில் இருந்தன. 

பாரிஸ் நகரின் அருகில் உள்ள "Charles de Gaulle" ஏர்போட்டில்  25.07.2000- அன்று 
விமானம் பறக்கத்  தயாரானபோது Gonesse என்ற ஹோட்டலில் மோதி விபத்துக்குள்ளானது.   விமானத்தில் இருந்த  அனைவரும் (100 பயணிகள் 
 9 விமான சிப்பந்திகள்) மற்றும் விமான ஓடு தளத்தருகே இருந்த 4 பேரும் 
மோட்சம் சேர்ந்தார்கள். கான்கார்டு விமானத்தின் 27 வருட வரலாற்றில் 
இதுதான்  மிகப்பெரிய விபத்து.அது மட்டுமல்லாமல் செப்.2001-ல் 
அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுர தாக்குதல்   uk மற்றும் பிரான்ஸ்-சுக்கு
 சற்று கலக்கத்தை ஏற்ப்படுத்தியது.எனவே  இந்த விமான போக்குவரத்து
 2003-ல் முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டது.

சில்லாட்டை என்றால் இன்று எத்தனை குழந்தைகளுக்குத்  தெரியும்?
பனை மட்டையை மரத்தோடு இணைக்கும் அந்த பகுதிதான் 40 ஆண்டுகளுக்கு
 முன்பு வரை விறகு அடுப்பு உபயோகித்துக்கொண்டிருந்த நம் மக்களுக்கு
 உடனடியாக தீ பற்றும் பொருளாக ( இன்று பேப்பர் இருப்பது போல) இருந்தது.
அன்று தீப்பெட்டி என்பதே அரிதுதான்.பக்கத்து வீட்டிற்கு  சென்று அவர்கள் 
அடுப்ப்புத் தணலை ( தீ கங்கு )  தேங்காய் சிரட்டையில் வாங்கி வந்து நம் வீட்டு 
அடுப்பில் போட்டு அதன்மீது சில்லாட்டை வைத்து ஊதுகுழலால் ஊதினால் 
உடனே சில்லாட்டை தீபற்றிக்கொள்ளும். 

பனைமரம் என்றதும் என்னவெல்லாம் ஞாபகம் வருகிறது என்று பாருங்கள்?


மலரும் நினைவுகள் போதும்.விஷயத்திற்கு வாருங்கள் என்கிறீர்களா? 
இதோ வந்துவிட்டேன். 


மேகங்கள் ஒன்டோடொன்று  கொண்ட காதலால் உச்சகட்டம் அடைய, கூடும் 
போது ஏற்படும் மின்னலின் மின்சக்தி பூமியை நோக்கி மட்டுமல்லாமல் மேல் 
நோக்கியும், இரு பக்கவாட்டுப் பகுதிகளிலும் கூட பாய்கிறது.பூமியை நோக்கி 
வரும் மின்னலைத்தவிர மற்றவற்றைப் பற்றி நாம் கவலைப்படத் 
தேவையில்லை. ஏனெனில் அவை அண்ட வெளியில் கலந்து கரைந்து விடுகிறது.

ஒரு பொட்டல் காட்டில் ஒரே ஒரு பனை மரம் மட்டும் இருப்பதாக வைத்துக்
கொள்வோம்.மின்னல் இப்பகுதியில் உருவாகி பூமியை நோக்கி வருகிறது.
 பனை மரத்தைத்  தொட்டவுடன் மின்னலுக்கு பூமியோடு தொடர்பு ஏற்பட்டு
விடுகிறது. மின்னலின் அனைத்து மின் சக்தியும் உடனே பனை மரத்திற்கு
 கடத்தப்படுகிறது.விளைவு? ஒரே சமயத்தில் பல்லாயிரக்கணக்கான "வாட்"
 மின்சக்க்தி ஒரு பொருளில் பாய்ந்தால் என்னாகும்? பனை மரம் தீ பிடித்து 
எரியும். அதனால் தான் இடி மின்னல் வந்தால் பனை மரத்தடியில் நிற்க கூடாது என்று சொல்கிறார்கள். 



அப்படியானால் பல பனை மரங்கள் நிறைந்த பகுதியில் நிற்கலாமா? அல்லது 
பல தென்னை  மரங்கள் நிறைந்த தென்னந்தோப்பில் நிற்கலாமா?

இதற்கு பதில்-  நிற்கலாம்.

"எப்படி?"

ஏற்கனவே கூறியது போல வேகமாக பூமியை நோக்கி வரும் மின்னல், மரங்களை தொடும் போது அதன் மின் சக்தி அனைத்து மரங்களுக்கும் சரிசமமாக கடத்தப்படுகிறது. இதனால் அதன் வீரியம் குறைகிறது. உதாரணமாக  ஒரு இடத்தில் 100 பனை மரங்கள்  இருப்பதாக வைத்துக்கொள்வோம். 

உயரமான பனை மரத்தை முதலில்  தாக்கும் மின்னல் அடுத்த மைக்ரோ வினாடியில் அதற்கு அடுத்த உயரம் குறைந்த மரத்தை தாக்குகிறது.  அடுத்த இரண்டாவது மைக்ரோ வினாடியில் மூன்றாவது உயரம் குறைந்த மரத்தை தாக்குகிறது ( புகைப்படம் பார்க்கவும்). இப்படியே அனைத்து மரங்களுக்கும் மின் சக்தி கடத்தப்படுவதால்  மரத்தின்  அடியில் நிற்கும் நம்மை மின்னல் அடையும் போது அதன் சக்தி வலுவிழந்து விடுகிறது. மேலும்,
பூமியின் தரைதளத்தை தொட்ட மின்னலின் மின் சக்தி, பூமியின் அனைத்து பாகங்களுக்கும் உடனடியாக கடத்தப்படுவதால் மின்னலின்  வீரியம் அது பூமியைத் தொட்டவுடன் குறைந்து விடுகிறது.




மரங்களோ அல்லது வீடுகளோ  இல்லாத பொட்டல் வெளியில் ஒருவர் நிற்பதாக வைத்துக்கொள்வோம். அவர் எப்படி மின்னலிலிருந்து தப்பிக்கமுடியும்?


அதற்கும் வழி இருக்கிறது. 


ஆறடி கொண்ட அந்த மனிதன் நின்று கொண்டிருந்தால் மின்னல் முதலில் அவனின் தலையைத் தாக்கும்.பின் ஆறடி உயதத்தைக் கடந்துதான் பூமியைத்தொடும். இந்த ஆறடி தூர பயணத்திலேயே மின்னல் மனிதனை எரித்துவிடும்.அப்படியானால் அவனின் தலைக்கும்  பூமிக்கும் உள்ள ஆறடி உயரத்தை உடனடியாக குறைக்க வேண்டும் .அப்போதுதான் அவன் பிழைக்கமுடியும். எப்படி குறைக்கலாம்? 

நீங்கள் புத்திசாலிகள் தானே! உடனே பின்னோட்டம் (comment ) இடுங்களேன்!!


குறிப்பு:


எங்கள் Blog: Jfivenews.blogspot.in
எங்கள்  facebook page  : J5 news




1. மறக்காமல் like & share பண்ணுங்க. அதுதான் என்னை மீண்டும் மீண்டும் எழுதத்  தூண்டும்.

2.இப்பதிவில் உள்ளவற்றை முன் அனுமதியின்றி வேறு எங்கேனும் பயன் படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- J5 news Team


















No comments:

Post a Comment

This is Jesu from Pathinathapuram