பிரதமரின் ஆயுள் காப்பீட்டுத்திட்டம்
பிரதமரின் காப்பீட்டுத்திட்டங்கள் பற்றி இதில் குறிப்பிடலாம் என்றிருக்கிறேன்.
மூன்று வித திட்டங்கள் உள்ளன.நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கிக்கு சென்று உங்களுக்கு விருப்பமுள்ள திட்டத்தின் பெயரை கூறி அவர்கள் தரும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் போதும். மூன்றையுமே நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
இந்த மாத கடைசிக்குள் சேர்ந்துவிட்டால் மெடிக்கல் செக்கப் எதுவும் கிடையாது. இந்த திட்டத்தின் படி, ஒவ்வொரு வருடமும் ஜூன் 1 முதல் மே 31 வரை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பணம் கட்டிக்கொள்ளலாம்.
தமிழ் நாட்டுக்கான இலவச தொலைபேசி எண் : 1800-425-4415. நான் பேசி விபரங்கள் கேட்டேன்.மிகவும் தெளிவாக தமிழிலேயே விளக்கினார்கள்.அவர்களுக்கு என் நன்றிகள்!
அதெல்லாம் சரிதான்! வருடத்திற்கு எவ்வளவு பணம் கட்ட வேண்டும்? விபத்து ஏற்பட்டால் நமக்கு எவ்வளவு பணம் தருவார்கள்? என்று கேட்கிறீர்களா?
இதோ உங்களுக்காக:
1).பிரதான் மந்த்ரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா : இது 2 லட்ச ரூபாய்க்கான ஆயுள் காப்பீட்டுத்திட்டம்.இதற்கான வருட சந்தா 330 ருபாய்.
2). பிரதான் மந்த்ரி சுரக்க்ஷா ஜோதி பீமா யோஜனா: இது 2 லட்ச ரூபாய்க்கான விபத்து காப்பீட்டுத்திட்டம்.இதற்கான வருட சந்தா 12 ருபாய்.
3). 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்களுக்கான பென்ஷன் திட்டம்: இதில் 210 ருபாய் முதல் 1454 ருபாய் வரை மாதம் பிரீமியமாக கட்ட்டலாம். அதற்கேற்றாற் போல் 60 வயதுக்கு பிறகு அவர்களுக்கு பென்ஷன் வழங்கப்படும்.
2.இப்பதிவில் உள்ளவற்றை முன் அனுமதியின்றி வேறு எங்கேனும் பயன் படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- J5 news Team

No comments:
Post a Comment
This is Jesu from Pathinathapuram